முல்லைத்தீவு – மாங்குளம் மற்றும் கிளிநொச்சி விபத்துகளில் ஆறு பேர் படுகாயம்

300

 

முல்லைத்தீவு – மாங்குளம் மற்றும் கிளிநொச்சி போன்ற பகுதிகளில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் ஆறு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாங்குளம்
மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று அதிகாலை 12:45 மணியளவில் மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புத்தளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வான் மாங்குளம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் பின்பக்கமாக மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

உழவு இயந்திரத்தின் பெட்டியில் மின்விளக்குகள் சமிக்ஞைகள் இன்மையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ் விபத்தில் சொகுசு வானில் பயணம் செய்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி
கிளிநொச்சி – புளியம்பொக்கனைப்பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கப்ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து மரத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைத்த நிலையில் சிகிச்சைக்காக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

SHARE