யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் முடங்கும் அபாயம்!

135

 

யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் முடங்கும் அபாய நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகளை விநியோகிப்பதில் பத்திரிகை நிறுவனங்கள் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.

பத்திரிகை விநியோக பணியில் ஈடுபடும் பணியாளர்கள் எரிபொருள் இன்மையால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதால் விநியோக பணிகள் பாதிக்கப்படவுள்ளன.

இதன் காரணமாக பத்திரிகைகள் விறியோகம் முடக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. இது தொடர்பில் பத்திரிக்கை நிறுவன தலைவர்கள், ஆசிரியர் பீடத்தினர், வடமாகாண ஆளூநர் மற்றும் மாவட்ட செயலர் ஆகியோருடன் கலந்துரையாடிய போதிலும் சாதகமான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை யாழில் மூன்று தொலைகாட்சி நிறுவனங்கள், வானொலி சேவைகள் என்பன உள்ளடங்கலாக 10 க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் உள்ளன.

அவற்றில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் ஊடக பணியாளர்கள் என பலரும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதேபோன்று யாழில் இருந்து கொழும்பில் உள்ள ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE