விமானிகள் வேலைநிறுத்தம்; 40,000 பயணிகள் கடும் அவதி

79

 

வேலைப் பளு, ஊதியக் குறைவு காரணமாக பிரசெல்ஸ் ஏர்லைன்ஸ் விமானிகள், விமானப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பெல்ஜியத்தில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

கொரோனாவுக்கு பின் விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஊழியர்கள் பற்றாக்குறையால் வேலைப்பளு அதிகரித்துள்ளதாகவும் அதற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை என பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மூன்று நாளுக்கு மேலாக போராட்டம் தொடர்வதால் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளகினர்.

SHARE