விஷேட தேவையுடையவர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு செயலமர்வு

115
(நூருள் ஹுதா உமர்)
இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் விஷேட தேவையுடையவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வலுவூட்டும் பல்வேறு வேலைத்திட்டங்கள் பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், விஷேட தேவையுடையவர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு தொடர்பான செயலமர்வு இறக்காமம் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ. சி அஹமட் நஸீல் தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எல். முகைதீனின் நெறியாழ்கையுடன் நடை இந்நிகழ்வில் சமூக சேவைப் பிரிவு உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எல். பைசல் வளவாளராக கலந்துகொண்டு சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு தொடர்பான செயலமர்வை நடாத்தி வைத்தார்.
SHARE