1ஆம் திகதி தொடக்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய நடைமுறை

126

 

செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொண்டுவரப்படும் நடைமுறை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை பணியாளர்கள் விமான நிலையத்திற்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் விசேட நுழைவாயில் திறக்கப்படவுள்ளது.

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
திறக்கப்படும் விசேட நுழைவாயில்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி இந்த விசேட நுழைவாயில் திறக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை பணியாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை தவிர்ப்பதே இதன் நோக்கம்.அத்துடன் இதன்மூலம் சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்பவர்களை அடையாளம் காண முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE