200,000 டொலர்களை ஒதுக்கியுள்ள சர்வதேச கிரிக்கட் பேரவை

74
சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு 200,000 டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5வது இடத்தை பெற்றதற்காக இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா – இந்தியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் திகதி இலண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. – ada derana

SHARE