அஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடை.. ஹிகென் ஷாவுக்கு 5 ஆண்டுகள் தடை: பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

291

 

ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் அஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடையும், ஹிகென் ஷாவுக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சண்டிலா மற்றும் ரஞ்சி வீரர் ஹிகென் ஷா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் பிசிசிஐ தடை விதித்திருந்தது.

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் ஷசாங் மனோகர் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று கூடியது.

இதில் சூதாட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவர் மீதான தடை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையின் முடிவில், அஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடையும், ஹிகென் ஷாவுக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE