அடர்ந்த காட்டுக்குள் நீரோடையில் குழந்தை பெற்றெடுத்த பெண்! வைரலான வீடியோ

216

625.117.560.350.160.300.053.800.210.160.90

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவரே அடர்ந்த காட்டுக்குள் நீரோடையில் எந்தவித மருத்துவ உதவியுமின்றி குழந்தையை பெற்றெடுத்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் Simone Thurber, மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் நான்காவது முறையாக கர்ப்பமானார்.

இந்த குழந்தையை மருத்துவ உதவியுமின்றி காட்டுக்குள் நீரோடைக்கு நடுவே பெற்றெடுக்க முடிவு செய்தார்.

இதற்காக குயின்ஸ்லாண்ட் காட்டுப்பகுதி அருகே வசிக்கும் தோழியின் உதவியை நாடினார்.

நிறைமாத கர்ப்பிணியாக குழந்தை பிறப்பதற்கு இருவாரங்களுக்கு முன் தோழியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பிரசவ வலி ஏற்பட்டவுடன் தன்னுடைய ஆடைகளை களைந்துவிட்டு மருத்துவ உதவி ஏதும் இல்லாமல் நீரோடைக்கு மத்தியில் நிற்கிறார்.

வலி அதிகமான சமயத்தில், குழந்தையின் தலை வெளியே வந்தவுடன் மிக மெதுவாக குழந்தையை வெளியே எடுக்கிறார்.

கடந்த 2012ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது, இதுவரையிலும் 52 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

இதனை நினைத்து தான் மிகவும் பெருமைப்படுவதாக Simone Thurber தெரிவித்துள்ளார்.

SHARE