அதிகாலை ரூம் கதவை தட்டிய மேனேஜர்.. ஹோட்டலில் தங்கிய விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நடந்த அதிர்ச்சி

47

 

விஜய் டிவியின் தென்றல் வந்து என்னை தொடும், ஈரமான ரோஜாவே, ஆயுத எழுத்து மற்றும் சன் டிவியின் நிலா உள்ளிட்ட தொடர்களில் நடித்து சின்னத்திரையில் பாப்புலரான சின்னத்திரை நடிகையாக இருப்பவர் சியமந்தா கிரண்.

நடிகை சியமந்தா கிரணுக்கு இன்ஸ்டாக்ராமில் 1.43 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதிகாலை கதவை தட்டிய ஹோட்டல் மேனேஜர்
சமீபத்தில் சியமந்தா கிரண் திருச்சியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கிறார். அங்கு early checkin வேண்டும் என முன்பே அவர் கேட்டிருந்தாராம், ஆனால் அவர் ஹோட்டல் சென்றபோது அது தொடர்பாக பிரச்சனை வந்திருக்கிறது. அதற்க்கு extra பணம் செலுத்துவது தொடர்பாக தான் சண்டை வந்திருக்கிறது.

அதிகாலை 5.30 மணிக்கு அவர் check-in செய்தாராம். அதன் பின் எப்போது காலி செய்வீர்கள் என தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் கால் செய்து கேட்டுக்கொண்டே இருந்தார்களாம்.

அதன் பின் மறுநாள் காலை 5 மணிக்கு ஹோட்டல் மேனேஜர் வந்து அவர்கள் ரூம் கதவை தட்டி ‘உங்க டைம் முடிந்துவிட்டது. காலி பண்ணுங்க’ என பல முறை பிரச்சனை செய்தாராம்.

அது பற்றி சியமந்தா கிரண் தற்போது கோபமாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

SHARE