அதிசயம் நடந்து விட்டது: மகனுடன் இணைந்த தாயின் கண்ணீர் வரிகள்

182

பாகிஸ்தானில் வசிக்கும் தாயுடன் 11 மாதங்களுக்கு பின்னர் சிறுவன் இணைந்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர் ரோகினா கியானி, இவருக்கும் காஷ்மீரை சேர்ந்த நபருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இருவருக்கும் ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது, ஆனால் கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் பிரிந்தனர்.

5 வயது சிறுவனான இப்திகார் அகமது தாயுடன் வசிந்து வந்தார், இதற்கிடையே கடந்தாண்டு துபாயில் நடைபெறும் திருமணத்துக்கு அழைத்து சொல்வதாக கூறி இப்திகார் அகமதை, அவனது தந்தை இந்தியாவுக்கு அழைத்து வந்தார்.

ANSAR BURNEY TRUST

இதுபற்றி தகவல் அறிந்ததும் ரோகினா கியானி தன்னுடைய மகனை மீட்டு தரக்கோரி பாகிஸ்தான் அரசின் உதவியுடன் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இப்திகார் அகமதை தாயிடம் ஒப்படைக்குமாறு கூறினர், இதற்கிடையே சமீபகாலமாக இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வந்ததால் சுமார் 11 மாதங்களுக்கு பின்னர் தாயிடம் ஒப்படைக்கப்பட்டான்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என் மகனுடன் நான் மறுபடியும் சேர்வேன் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டேன், ஆனால் அதிசயம் நடந்து விட்டது என தெரிவித்துள்ளார்.

AURANGZEB SAIFULLAH
SHARE