அபிருத்தியடைந்துவரும் உலகுடன் இணைந்து இலங்கையும் பயணிக்க வேண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

178

தொழில்நுட்பத்துடன் அபிருத்தியடைந்துவரும் உலகுடன் இணைந்து இலங்கையும் பயணிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


13 வருடகால பாடசாலை கல்வியை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பின்லாந்தின் கல்வி முறையை ஆராய்ந்திருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

கொழும்பு தேவி பாலிக்கா வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் உரையாற்றுகையிடலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த சவாலை வெற்றிக் கொள்வதற்கு நாட்டை பலப்படுத்தப் போவதாக தெரிவித்த பிரதமர்  இன்று இலங்கையின் சகல துறைகளையும் நவீனமயப்படுத்தும் வேலை ஆரம்பமாகி உள்ளது.

நவீன மயப்படுத்தலுடன் இணைந்து பயணிப்பது அவசியம். அதிலிருந்து விலகி செல்ல முடியாதென்றும்  பிரதமர் ரணில்விக்கிரமசிங்க  சுட்டிக்காட்டினார்.

SHARE