அபிவிருத்தி வேலைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்: கயந்த கருணாதிலக

228

 

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் எந்தவொரு அபிவிருத்தி வேலைகளும் இடைநிறுத்தப்படாது எனவும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

பென்தோட்டப் பகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பென்தோட்ட மாவட்ட செயலகத்தின் கீழுள்ள 53 குடும்பங்களுக்கான வீட்டு நிலங்கள் இதன் போது கையளிக்கப்பட்டன.

தற்போது அபிவிருத்தி வேலைகளில் இடம்பெற்று வருகின்ற தேவையற்ற மோசடிகளே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அபிவிருத்தி வேலைகள் எதுவும் தடுத்து நிறுத்தப்படவில்லை.

SHARE