அமரர் சௌமி­ய­மூர்த்­தி ­தொண்­டமான் பெயரை நீக்க முயல்­வ­தற்கு எதி­ராக தலை­ந­கரில் ஆர்ப்­பாட்டம்…!!

161

அமரர் சௌமி­ய­மூர்த்­தி ­தொண்­டமான் பெயரை நீக்க முயல்­வ­தற்கு எதி­ராக தலை­ந­கரில் ஆர்ப்­பாட்டம் இன்று நடத்­தப்­படும் என்று ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ் அறி­வித்­துள்­ளது. இது குறித்து அக் கட்சி விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இந்­தி­ய­வம்­சா­வளி மக்கள் நலன் மட்­டு­மின்றி தேசிய அர­சி­ய­லிலும் அரும் பெரும் சேவை­யாற்­றிய அமரர் சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மானின் பெயரை குறிப்­பாக பயிற்சி மையம் மற்றும் மண்­ட­பங்கள் விளை­யாட்­டு­மை­தானம் போன்­ற­வற்­றி­லி­ருந்து நீக்­க­ மு­யலும் வர­லாற்று துரோ­கத்­திற்கு எதி­ராக அதனை கண்­டித்து தலை­ந­கரில் ஆர்ப்­பாட்டம் செய்ய வேண்­டி­யுள்­ளது.

இலங்­கை­ தொ­ழி­லாளர் காங்­கிரஸ் கொழும்பு கிளையுடன் ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ் இணைந்து இலங்கை இந்­தி­ய­ வம்­சா­வளி மக்­களின் வர­லாற்றை பரி­ண­மிக்க செய்த சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மானின் பெயரை அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்­தி­னூ­டாக அழிக்­க­மு­யல்­வதை எதிர்த்து மலை­ய­க ­மக்­க­ளுக்கு ஆத­ர­வா­க ­த­லை­ந­கரில் இன்று வெள்ளிக்­கி­ழமை காலை 10 மணி­ய­ளவில் கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்தின் முன்­பாக ஆர்ப்­பாட்டம் நடத்த உள்ளனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் தலைநகர் வாழ் தமிழ் மக் கள் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE