அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி வவுனியாவில் சிறப்ப பூஜை வழிபாடு
பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியா அந்தணர் ஒன்றியம் மற்றும் தமிழ் விருட்சம் ஏற்பாட்டில் நீண்டகாலமாக சிறையிலிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி சுடரேற்றி சிறப்பு பூஜை வழிபாடு ஒன்று இன்று வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நகர உப பிதா எஸ்.சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.