அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் நாளை பணிப்புறக்கணிப்பு

87

19 அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் நாளை நாடு தழுவிய ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ள தீர்மானித்துள்ளனர்.

நீதித்துறை சார்ந்தவர்களுக்கு மாத்திரம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரச சேவை நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிய குழுமத்தின் தலைவர் நிமல் கருணாசிறி குறிப்பிட்டார்.

19 அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, சம்பளப் பிரச்சினை உட்பட தீர்க்கப்படாத பிரச்சினைகள் பலவற்றை முன்னிறுத்தி, எதிர்வரும் வாரம் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது

SHARE