அவசரமாக தேர்தல் ஆணையாளரை சந்தித்த மஹிந்த!

230
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக தேர்தல்கள் ஆணையாளரை இன்று காலை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.

பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, குமார் வெல்கம ஆகிய முன்னாள் அமைச்சர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ச கையெழுத்திட்டுள்ள வேட்புமனுவில் இருந்து அவரது பெயர் இறுதி நேரத்தில் நீக்கப்பட்டால், அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மஹிந்த ராஜபக்ச தரப்பு தேர்தல் ஆணையாளருடன் கலந்துரையாடுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE