இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை ஆடுகளங்கள் சுழல் பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமானவை என்பதால், அவ்வணியை சொந்தமண்ணில் வீழ்த்துவதற்காக முரளிதரனின் ஆலோசனையை அவுஸ்ரேலிய அணி பெறவுள்ளது.
மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் அவுஸ்ரேலிய சுழற்பந்து வீச்சாளர்களுக்கும், துடுப்பாட்ட வீரர்களுக்கும் முரளிதரன் ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.