புஸ்ஸல்லாவ மெல்போட் தோட்ட கருமாரியம்மன் ஆலய வருடாந்த ஆடி மாத ஆடி வேல் திருவிழா ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ க.மகேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பால்குட பவனி, வசந்த மண்டப பூஜை, சுவாமி வெளிவீதி வலம் வருதல், பறவைக்காவடி, பக்தர்களுக்கான பிரசாதம் வழங்கல் என்பன நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.
படங்களும் தகவல்களும் :- பா.திருஞானம்