ஆறுமுகவேலவர்க்கு இன்று 6ம் திருவிழா

201

ஆராத்துயர்‬ போக்கும் எம்பெருமான் நல்லை ஆறுமுகவேலவர்க்கு இன்று ஆறாம் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி ‪நல்லூர்‬ அருள்மிகு ‪கந்தசுவாமிகோவில்‬ வருடாந்த துர்முகி வருஷ மஹோற்ஸவத்தின் 6ஆம் நாள் திருவிழா இன்றாகும்.

நல்லூரில் கர்ப்பக் கிருகத்தில் மூலவர்
வேல் என்னும் உருவில் தருசனம் தருவார்
பல்லூரும் போற்றிடும் சண்முகப் பெருமான்
அலங்காரக் கந்தனாய் அனைவர்க்கும் அருள்வார்
தொல்புகழ்ச் சங்கிலி மன்னனின் சிலையும்
அவனது அரண்மனை யமுனா ஏரியும்
நல்லொரு சாட்சியாய் இன்றைக்கும் இலங்கும்
நல்லைநகர்க் கந்தரே பள்ளி எழுந்தருளாயே.

”தரணியெலாம் காத்தனை போற்றி
போற்றி எம்வாழ்நாள் முதலாகிய தெய்வமே
நல்லைநகர் கந்தரே போற்றி போற்றி”

SHARE