இந்திய அணியில் மேலும் ஒரு விராட் கோஹ்லி!

214

 

இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியை போல் கே.எல்.ராகுலும் அபாயகரமான வீரர் என கிறிஸ் கெயில் புகழ்ந்துள்ளார்.

மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் சிக்ஸர் மெஷின் என்ற தலைப்பில் தனது சுயசரிதை புத்தகத்தை டெல்லியில் இன்று வெளியிட்டுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய கெயில், கே.எல்.ராகுல் மிகவும் திறமையான வீரர். கே.எல்.ராகுல் இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறார். விராட் கோஹ்லியை போல் அவரும் அபாயகரமான வீரராக இருக்க முடியும். அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் ராகுலுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.

இதற்காக கோஹ்லியை அவர் மிஞ்சி விட்டார் என்று அர்த்தமல்ல. கோஹ்லி நீண்ட காலமாக கிரிக்கெட்டில் ஒரு அடையாளமாக திகழ்ந்து வருகிறார். அவர் சிறந்த மனிதர் என்பதில் சந்தேகம் இல்லை.

ரகானேவையும் எனக்கு பிடிக்கும். நீண்ட காலமாக அவர் விளையாடி வருகிறார். ரகானே ஒரு சிறந்த ஆட்டக்காரர். அவர் கார்ல் ஹூப்பரை நினைவு கூர்கிறார் என கெயில் கூறியுள்ளார்.

SHARE