இந்திய கிரிக்கெட் அணி உச்ச நிலைக்கு செல்லும்- முரளிதரன்

208

அனில் கும்ப்ளே, விராட் கோஹ்லி என இருவரின் கூட்டணியில் இந்திய கிரிக்கெட் அணி உச்ச நிலைக்கு செல்லும் என சுழற்பந்து ஜாம்பவான் கூறியுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானான முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், இவர் அனில் கும்ப்ளே , விராட் கொஹ்லியின் கூட்டணியில் இந்திய கிரிக்கெட் அணி உச்ச நிலைக்கு செல்லும் என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, விராட் கோஹ்லி ஒரு சிறந்த ஆட்டக்காரர். அது மட்டுமல்லாது, துடுப்பாட்டக்காரர்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களும் நன்றாக அமைந்துள்ளனர்.

இது இந்தியாவின் தொடர் வெற்றிக்கு அடித்தளமாகும்.

மேலும், அனில் கும்ப்ளே இந்திய அணியின் சூழ்நிலையை அறிந்திருக்கும் ஒரு திறமையான நபர். இவர் சிறந்த முறையில் இந்திய அணியை வழி நடத்தி செல்கிறார்.

இதைத் தொடர்ந்து, இந்திய அணி நியூசிலாந்திற்கு எதிரான தொடரை மட்டுமல்ல, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுற்கு எதிரான தொடரையும் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

capture-125

SHARE