இந்திய மீனவர்கள் விடுதலை

253
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 29 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி முல்லைத்தீவு – திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் இந்திய இழுவை படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டதன் காரணமாக கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களும் இன்று காலை 11.45 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இந்திய கடற்படையினரிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

SHARE