தமிழ் அரசியல்வாதி ஒருவரின் கொலையுடன் தொடர்புடைய இரகசியப் பொலிஸாரின் மிக முக்கிய அறிக்கையொன்று ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரகசியப் பொலிஸாரின் அறிக்கையொன்று வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு சென்றுள்ளமை இதுவே முதல்தடவை என குறிப்பிடப்படுகின்றது.
இந்த அறிக்கை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளமையை அவ்வமைப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு இரகசியப் பொலிஸாரின் முக்கிய அறிக்கையொன்று வெளிநாட்டு நிறுவனமொன்றுக்குச் சென்றமை குறித்து இதுவரையில் எந்தவொரு விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அரசியல் மட்டங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.