இரு ஹெலிகொப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ; ஒருவர் பலி

10

 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே பசிபிக் பெருங்கடலில் இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒன்றுடன் ஒன்று மோதி நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காணமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

ஜப்பான் கடற்படையைச் சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதுடன் அதில் தலா 4 பேர் பயணம் செய்தனர்.

டோக்கியோவில் இருந்து 600 கிலோமீட்டர் தெற்கே உள்ள டோரிஷிமா தீவு அருகே இரண்டு ஹெலிகாப்டர்களும் திடீரென தொடர்பை இழந்தன.

இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த 2 ஹெலிகாப்டர்கள் கடலில் விழுந்ததில் இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒன்றுடன் ஒன்று மோதி நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர்களை தேடும் பணி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE