இலங்கையில் போர்க் குற்றங்கள் நடக்கவில்லை என்று பிரித்தானிய பிரபுக்கள் சபையில் உரையாற்றிய நெஸ்பி பிரபுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசியமாக நன் றிக் கடிதம் அனுப்பியுள்ளார் என்று கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள் ளார்.
இறுதிப் போரில் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டது போல 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றும், இறுதிப் போரில் 7000 தொடக்கம் 8000 வரையானவர்களே கொல்லப்பட்டனர் என்றும், அவர்களில் கால்வாசிப் பேர் சாதாரண உடையில் இருந்த புலிகள் என்றும் கடந்த ஒக்டோபர் மாதம் பிரித்தானிய பிரபுக்கள் சபையில் உரையாற்றிய போது, நெஸ்பி பிரபு கூறியிருந்தார்.
இந்த நிலையில், அரசுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட நெஸ்பி பிர புவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் என்றும் தமிழ் பிரிவினைவாதிகளின் அழுத்தங்களால் அந் தக் கடிதம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பாக வெளிவிவகாரச் செயலரின் இணைப்புக் கடிதத்தில், ஜனாதிபதியின் கடிதத்தின் உள்ளடக்கம் இலங்கை அல்லது பிரித்தானிய ஊடகங்களுக்குப் பகிரப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.