இலங்கை-இந்திய கிரிக்கெட் சூதாட்டம் நால்வர் கைது.!

149

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் நேற்று (25) கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெற்ற போட்டியிலேயே இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“த ஹிந்து ” பத்திரிகை இன்று (26) இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 15 அலைபேசிகள், 2 கணினிகள் மற்றும் ஒரு இலட்சம் இந்திய ரூபாய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களின் அலைபேசிகளை சோதனை செய்வதற்கும், சூதாட்டத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE