இலங்கை கிரிக்கெட் வீரருக்கு நிபந்தனை ஜாமீன்

167

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நூவன் குலசேகரா நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் கண்டி நகரிலிருந்து கொழும்புவிற்கு நூவன் குலசேகரா காரில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் மோதியது.

இரு சக்கரவாகனத்தில் வந்தவர்கள் பலத்த காயமடைந்ததால், சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன் காரணமாக கார் ஓட்டி வந்த குலசேகராவை பொலிசார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் பொலிசார் ஆஜர்படுத்திய போது, தான் இந்த விபத்தை ஏற்படுத்தவில்லை என்றும் இரு சக்கரவாகனத்தில் வந்தவர்கள் தான் தவறுதலாக காரில் வந்து மோதியதாகவும் குலசேகரா தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் குலசேகராவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற குலசேகரா, இலங்கை அணிக்காக ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE