இலங்கை மத்திய வங்கியில் தமிழ் கொலை

171

இலங்கை மத்திய வங்கியின் இராஜகிரியையில் அமைந்திருக்கும் வங்கி தொழில் கற்கைகளுக்கான நிலையத்தில் அமைந்திருக்கும் விளம்பர பலகை ஒன்றில் ‘கடன் ஆலோசனை நிலையம்’ என்பதற்கு பதிலாக ‘கடன் ஆலொசனை நிலையம்’ என தவறுதலாக தமிழ் கொலை ஒன்று நிகழ்ந்துள்ளது. பிரதான பாதையின் அருகில் காணப்படும் இந்த விளம்பர பலகையினை நாளாந்தம் பார்வையிடும் மக்கள் மத்திய வங்கி தவறு இழைத்துள்ளது என்று மனதிற்குள் முனுமுணுத்துக்கொண்டு செல்கின்றனர். ஆதலால் இதனை திருத்தவேண்டியது சம்பந்தபட்ட அதிகாரிகளின் கடமையாகும்.

தகவலும் படங்களும்:- பா.திருஞானம்

unnamed (2)

 

SHARE