ஈராக்கில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் – 15 பேர் பலி 50க்கும் மேற்பட்டோர் காயம்

186

ஈராக்கில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் - 15 பேர் பலி 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா மதப்பிரிவு  மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று  நடத்தப்பட்ட பல்வேறு  தாக்குதல்களில்   15 பேர் கொல்லப்பட்டதுடன் . 50-க்கும் அதிகமானோ காயம் அடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாக்தாத்தின்   தென்மேற்கு பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள  வர்த்தக தொகுதியில் தற்கொலைக்குண்டுதாரி நடத்திய  தாக்குதலில்   7  பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு  பாக்தாத்தில் நடத்தப்பட்ட மற்றொரு தற்கொலைத்  தாக்குதலில் 5  பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன்  15-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
வடக்கில் ஷபி அல்-போர் பகுதியில் நடத்தப்பட்ட வேறொரு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் . 10-க்கும் அதிகமானோ படுகாயமடைந்தனர்.
இந்த தொடர்  தாக்குதல்களை ஐ எஸ் அமைப்பே நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்ற போதிலும்  எந்தவொரு அமைப்பும் இதுவரை  தாக்குதல்களுக்கு உரிமை கோரவில்லை.

SHARE