உலகில் மிகவும் ரகசியம் வாய்ந்த இடங்கள் எவை

247
பூமியின் அனைத்து பகுதியிலும் மக்கள் வசித்து வந்தாலும் மனிதர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகள் என சில இருக்கதான் செய்கின்றன.மிகவும் ரகசியம் வாய்ந்ததாகவும், பாதுகாப்பு நிறைந்ததாகவும் கூறப்படும் இப்பகுதிகள் மனிதர்களுக்கு எட்டா கனியாகவே இருந்து வருகின்றன.

ஸ்வால்பார்ட் க்ளோபல் சீட் வால்ட், நோர்வே

பூமியில் மிகப் பெரிய இயற்கை பேரழிவு ஏற்படுகிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள். அடுத்தது என்னவாகும்? மக்களின் வாழ்க்கை சூழல் சூறையாடப்படும்.

பூமியின் உள்கட்டமைப்பு மிகப்பெரிய அழிவை சந்திக்கும். உணவுக்காக மக்கள் என்ன செய்வார்கள்?

அத்தகைய சூழலில் உதவியாக இருக்கும் ஒரே இடம் இந்த Svalbard Global Seed Vault தான்.

நோர்வேயின் எல்லைக்குட்பட்ட Spitsbergen தீவியில் அமைந்துள்ள இந்த வாலட்டில் 250 மில்லியன் அளவில் 300 வகையான தானியங்களின் விதைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

எனவே இயற்கை சீற்றங்களாலோ அல்லது வேறு அழிவுகளாலோ தானியங்கள் அழிந்து போனால் இங்கிருந்து விதைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

எத்தகைய சூழல்களிலும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் இது கட்டப்பட்டுள்ளது. அதன் காரணமாக இப்பகுதியில் முக்கியமானவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

நீஹாவ், ஹவாய்

ஹவாயில் உள்ள இந்த Niihau தீவு பூர்வக்குடி மக்களுக்கான சிறிய தீவு ஆகும். மேலும் அரிய தாவரங்கள், அழிவு நிலையில் உள்ள விலங்கினங்கள் ஆகியவை இந்த தீவில் உள்ளன.

இந்த தீவில் 130 நிரந்தர பூர்வக்குடி மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் நூறு ஆண்டுகளாக இந்த தீவில் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

வெளியாட்கள் வருவதை தடுப்பதற்காகவே 24 மணித்தியாலங்களும் கடலோர படை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த தீவில் வசிப்பவர்களின் அனுமதி இருந்தால் மட்டுமே தீவிற்குள் அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் விமானப்படை மென்வித் ஹில், இங்கிலாந்து

இங்கிலாந்தில் வடக்கு யோர்க்‌ஷயர் பகுதியில் அமைந்துள்ள இந்த விமானப்படை தளம் உலகில் உள்ள மிகப்பெரிய கண்காணிப்பு மையமாகும்.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் புலானாய்வு துறைகளின் கூட்டு முயற்சியுடன் இம்மையம் செயல்பட்டு வருகிறது.

பனிப்போர் காலத்தில் சோவியத் யூனியனின் செயல்பாடுகளை கண்டுபிடிப்பதற்காக இம்மையம் கட்டப்பட்டது.

தற்போது சர்வதேச தீவிரவாத செயல்பாடுகள், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக புலனாய்வு செய்யப்படுகின்றது.

மேலும் அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த ECHELON அமைப்புடன் கூட்டு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே இதன் உள்ளே என்ன நடக்கிறது என்ற ரகசியம் வெளி உலகிற்கு தெரியாமலேயே உள்ளது.

வாடிகன் ரகசிய காப்பகம், வாடிகன்

வாடிகனில் அமைந்துள்ள இந்த நூலகம் உலகின் மிக முக்கிய பாதுகாப்பு நூலகமாகும். கடந்த 8 ஆம் நூற்றாண்டில் இருந்து போப் தொடர்பான ரகசியங்கள் இந்த நூலகத்தில் உள்ளன.

இதன் காரணமாக வெளியாட்களுக்கு இந்த நூலகத்தில் அனுமதி அளிக்கப்படுவதில்லை. தகுதி நிறைந்த அறிஞர்களுக்கு மட்டுமே நூலகத்தின் உள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

அதுவும் அவர்கள் எந்த காரணத்திற்காக செல்கின்றனர், அவரது தனிப்பட்ட விபரங்கள் ஆகியவை அறிந்த பின்னரே அனுமதி அளிக்கப்படுகிறது.

Area 51, நிவேடா

அமெரிக்காவின் நிவோடா பகுதியில் அமைந்துள்ள இந்த ராணுவ தளம் பற்றிய தகவல்கள் வியட்னாம் போரின் போதுதான் வெளியே தெரியவந்தது.

அமெரிக்க புலானாய்வு அமைப்பான CIAவின் ராணுவ தளமாக செயல்படும் இதில் அமெரிக்கா தொடர்பான மிகவும் முக்கிய ரகசிய தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இங்கு என்ன உள்ளது, எந்த காரணத்துக்காக இந்த இடம் செயல்படுகிறது போன்ற தகவல்கள் யாருக்கும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE