எதிர்காலத்தில் அரசியல் மேடை உருவாகும் – மகிந்த

278
சில தரப்பினர் இலங்கையின் கலாசாரத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  இடம்பெற்ற பூஜை வழிபாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடு சென்ற பாதையை வேறு பக்கம் திசை திருப்பும் முயற்சிகளிலேயே இவர்கள் ஈடுபடுகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்காலத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளும் மேடைகள் அல்ல மாறாக அரசியல் மேடைகளே உருவாக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குழுவொன்று இந்த நாட்டின் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. சிங்கள கலாசாரத்தை நம் மத்தியிலிருந்து தகர்த்தி தூரமாக்குவதற்கே இத்தரப்பினர் முனைந்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள், சமத்துவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கதைத்துக்கொண்டு தேசியத்தை நாசகரமாக்கும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளில், மாளிகைகளில் திருட்டுத்தனமாக செய்தவற்றை தற்போது பொது இடங்களில் செய்து அதை சட்டமாக்க முனைகின்றார்கள்.

நாம் சென்ற பாதையை வேறுபக்கமாக மாற்ற முனையும் போது பழிவாங்கல்கள், பகைமை, குரோதங்கள் இவர்களின் முக்கிய பங்காக காணப்படும் வேளையில் நாம் செய்யும் பூஜை வழிபாடுகளின் காரணமாக அந்த தலைவர்களின் மனங்களில் பகைமை உணர்வுகள் இல்லாமல் போகட்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

SHARE