எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு திடீர் அறிவிப்பு!!

163

நேற்று நள்ளிரவு முதல் அதிகாரிக்கப்பட்ட புதிய விலையில் எரிபொருள்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று சகல பெற்றோலிய எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலிய வளத்துறை அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது என்று கொழும்பு பெற்றோலிய கூட்டுத்தாபன பாவனையாளர் சேவை பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிய விலையில் எரிபொருள்களை விற்பனை செய்தால், நுகர்வோர் 115455455 என்ற தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE