எலுமிச்சை ஜுஸில் பேக்கிங் சோடா கலந்து குடிங்க: அதிசயங்கள் இதோ

139

மருத்துவ குணம் அதிகம் நிறைந்த எலுமிச்சையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருப்பது என்பது அனைவருக்குமே தெரியும்.

ஒருவர் அன்றாடம் எலுமிச்சை ஜூஸைக் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று பல கட்டுரைகளில் படித்திருப்பீர்கள்.

இது உண்மையே. ஆனால் எலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடாவை சேர்த்து குடித்து வந்தால், நாம் நினைத்திராத அளவில் பல நன்மைகளைப் பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

எலுமிச்சை பேக்கிங் சோடா பானம்

ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி, அதில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த பானத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

ஒருவேளை இந்த பானத்தை ஒருவர் பகல் வேளையில் குடித்தால், இந்த பானம் உடலினுள் சிறப்பாக செயல்படாமல், எதிர்பார்த்த நன்மைகளை வழங்காது.

எடை குறைவு

பேக்கிங் சோடா, எலுமிச்சை மற்றும் எடை குறைவிற்கு எவ்வித நேரடி தொடர்பும் இல்லை. ஆனால் எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா கலவை உடலுக்கு ஆற்றலை வழங்கி, உடற்பயிற்சியின் போது சிறப்பாக ஈடுபட செய்து, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும்.

இதன் விளைவாக உடல் எடை குறையும். ஆகவே எடையைக் குறைக்க எலுமிச்சை, பேக்கிங் சோடா பானத்தைக் குடித்தால் மட்டும் போதாது, அத்துடன் உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும்.

சுத்தப்படுத்தும் பண்புகள்

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை பானத்தில் நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளது. பொதுவாக சாதாரண எலுமிச்சை ஜூஸைக் குடித்தாலே அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.

ஒருவரது சிறுநீரின் வழியே தான் டாக்ஸின்கள், உப்புகள், கொழுப்புகள் மற்றும் அதிகப்படியான நீர் போன்றவை வெளியேறும்.

அதிலும் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை பானத்தை ஒருவர் குடித்தால், சிறுநீரகங்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் குறைவதோடு, உடலில் டாக்ஸின்களின் அளவு குறைந்து, உடல் சுத்தமாகவும், சிறுநீரகங்கள் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

செரிமானம் மேம்படும்

பேக்கிங் சோடா எலுமிச்சை பானம், மிகச்சிறந்த ஆன்டாசிட்டாக செயல்பட்டு, அஜீரண பிரச்சனைகள், வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்று பிடிப்பு, நெஞ்செரிச்சல் போன்றவற்றை விரைவில் தடுக்கும்.

மேலும் இந்த பானம் குடலில் உள்ள அழற்சியைத் தடுத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

புற்றுநோயைத் தடுக்கும்

எலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடா கலந்து குடித்தால், அது புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கும். ஏனெனில் எலுமிச்சையில் கார்சினோஜெனிக் செல்களை எதிர்க்கும் பொருள் உள்ளது. அதோடு இந்த கலவை உடலுக்கு கொடுக்கப்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.

SHARE