ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவரை வைத்தியசாலையின் உரிமையாளர் பாலியல் தொந்தரவிற்கு உட்படுத்தியமையால் அவர் விசம் அருந்தி தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

244
ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவரை வைத்தியசாலையின் உரிமையாளர் பாலியல் தொந்தரவிற்கு உட்படுத்தியமையால் அவர் விசம் அருந்தி தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய குறித்த கூட்டுறவு வைத்தியசாலையின் உரிமையாளர் குறித்த பெண்ணை வைத்தியசாலைக்குள் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

இதன் காரணமாக குறித்த பெண் விசமருந்தி ஆபத்தான நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இந்தவேளையில் குறித்த யுவதி தமிழ் என்பதனாலும் குற்றத்தினை புரிந்தவர் இன்னொரு இனத்தினை சேர்ந்த அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலம் உள்ளதன் காரணமாக குறித்த சம்பவத்தினை திசைதிருப்பும் வகையிலான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக குறித்த யுவதியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இச்சம்பவம் தொடர்பில் யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றன.

அண்மைக்காலகமாக தமிழ் யுவதிகள் பலர் இவ்வாறான பாலியல் பலாத்காரங்களுக்கு உட்படுத்தப்பட்டு இறுதியில் தற்கொலைசெய்யும் நிலைக்கு செல்வது தொடர்பில் கடும் கவலையும் வேதனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE