ஒரு பேர்ச் நிலத்தை 200 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

157

கொழும்பு துறைமுக நகரத்தின் (போர்ட் சிட்டி) ஒரு பேர்ச் நிலத்தை 200 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு பேர்ச் நிலப்பரப்பை உருவாக்குவதற்கு 2,85,000 ரூபா செலவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துறைமுக நகரின் கண்காணிப்புப் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தபோது ஊடகமொன்றிடம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் நிலப்பரப்பை உருவாக்கும் பணிகள் முடிவுக்கு வந்துவிடும். அவை முடிவுக்கு வந்ததன் பின்னர் இந்த துறைமுக நகரம் இலங்கையின் நிலப்பரப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அறிவிக்கப்படுமெனவும் அமைச்சர் சம்பிக்க தெரிவித்தார்.

SHARE