காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன காலமானார்

291
காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தன காலமாகியுள்ளார்.

கடுமையான சுகவீனமுற்றிருந்த அமைச்சர் அண்மையில் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழக்கும் போது அவருக்கு 69 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய சகாக்களில் ஒருவராக குணவர்தன கருதப்படுகின்றார். கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் குணவர்தன உயிரிழந்துள்ளார்.

SHARE