கிளிநொச்சியில் இடம்பெற்ற 150 வருட பொலீஸ் தின நிகழ்வுகள்

267

 

மைக்கில் காந்தன்
1866 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை பொலீஸ் பிரிவின் 150 வருட நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியிலும் இடம்பெற்றது.
கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பொலீஸ் திணைக்களத்தின் 150 வருடத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வமத பிரார்த்தனை மற்றும் பொலீஸ் அணிவகுப்பு என்பன இடம்பெற்றது.
அத்தோடு 150 வருட நினைவாக கிளிநொச்சி சென்திரேசா மகளீர் கல்லூரி மாணவிகளிடையே நடாத்தப்பட்ட சித்திர போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி பிராந்திய பிரதி பொலீஸ்மா அதிபர் மகேஸ் வெலிகன்ன மற்றும் சர்வமத தலைவர்கள் சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள்,பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
unnamed (9) unnamed (10) unnamed (11) unnamed (12)
SHARE