கிழக்கு சிரியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல் – 18 பேர் பலி

126

கிழக்கு சிரியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல் - 18 பேர் பலி

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
இந்நிலையில், கிழக்கு சிரியாவின் டேர் எசர் பகுதியில் உள்ளது அல் பெய்ரா நகரம். இங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் அமெரிக்க கூட்டு படைவீரர்கள் 11 பேர் மற்றும் 3 குழந்தைகள் உள்பட 7 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர் என சிரியாவில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
SHARE