கொழும்பில் வெட்டிக்கொலை செய்யப்பட்டவரின் சடலம் மீட்பு

452
கொழும்பு பொரல்லை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட கித்துல்வத்தை கொல்ஃப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொரல்லை காவற்துறையினர் இன்று காலை இந்த சடலத்தை மீட்டுள்ளனர். காலை 6.5 அளவில் காவற்துறையினரின் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமான 119 இக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை மீட்டுள்ளனர்.

கொல்ஃப் மைதானத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்த சமிந்த என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கூரிய ஆயுதங்களினால், இவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் கூறினர்.

எந்த காரணத்திற்காக இந்த நபர் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. பொரல்லை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE