கொழும்பு – கட்டுநாயக்க அதிவே நெடுஞ்சாலையில் ஒருபகுதி தற்காலிகாமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய களனிப் பால திருத்தப்பணிகள் காரணமாகவே குறித்த கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இன்றிலிருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதன் காரணமாக சாரதிகளும் குறித்த வீதியைப் பயன்படுத்துவோரும் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.