கொழும்பு கோட்டை புகையிரத நிலைய ஊழியர்கள் 05 பேர் பணி நீக்கம்

228
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் 3ம் மேடையில் காணப்பட்ட 02 திரைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 05 பேர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

புகையிரத உப பணியாளர்கள் குழுவின் ஊழியர்கள் 05 பேர் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

கடந்த 19ம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் காணப்பட்ட 02 திரைகள் காணாமல் போனமை தொடர்பில் புகையிரத திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இதன்படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சம்பவத்துடன் தொடர்புடைய புகையிரத உப பணியாளர்கள் மற்றும் குழுவின் ஊழியர்கள் 05 பேரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

SHARE