காணிப்பத்திரங்களை வழங்கவென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இன்று விஜயம்

360

 

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வளலாய், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வயாவிளான் ஆகிய கிராமங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளை விடுவித்து அந்த காணிகளுக்குரியவர்களுக்கு காணிப்பத்திரங்களை வழங்கவென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோர்  இன்று விஜயம்  இதற்கான நிகழ்விடங்கள் இராணுவத்தினரின் உதவியுடன் இன்று தடல்புடலாக அமைக்கப்பட்டது.

002 003

இதனை அதிகாரிகள் நேரில் சென்று ஆராய்ந்தனர். நாளை நடைபெற இருக்கும் இந்த நிகழ்வில் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வளலாயில் 60 பேருக்கு மாத்திரம் பத்திரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் நாளை யாழ்ப்பாணம் வருகின்றனர் என்ற விடயம் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

Ranil-Maithri-Chandrila-1

SHARE