சர்வதேச நாடுகளிடம் எமது நாடு முழங்காலிட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது! ஆதங்கத்தில் நாமல்

259
சர்வதேச நாடுகளிடம் எமது நாடு முழங்காலிட வேண்டி வந்துவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் பின்புலங்களுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  எதிர்கால நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என அவர் தன்னுடைய முகப்புத்தகக் கணக்கில் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ள அவர்,

எனது தந்தையும் இந்நாட்டின் மீது அதீத பற்றுக் கொண்டவருமான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்நாட்டின் பாதுகாப்பிற்காகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காகவும் முன்னின்று செயற்படுவார்.

தற்பொழுது ஆட்சி செலுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் நாடு பொருளாதார வீழ்ச்சியினை சந்தித்துள்ளது. இதுவே எமது நாட்டினை சர்வதேசத்திடம் மண்யிடச் செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பொருளாதாரம் சரியும் போது அந்நிய சக்திகளின் பலம் பெருகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE