சற்சங்க மூன்றாவது அறநெறி விழாவை முன்னிட்டு முல்லைத்தீவு அறநெறிப்பாடசாலைகளுக்கு இசை கருவிகள் வழங்கிவைப்பு

210

முல்லைத்தீவு அருள்மிகு மம்மில் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் 14.08.2016 அன்று ஆலய பூசகர் அ.நாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் காரைதீவு திருமதி.சண்முகம் மனோன்மணி சற்சங்கம் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களின் ஆன்மீக வழிபாட்டையும், கலை இலக்கியங்களை பேணும் நோக்கோடு இந்நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

இதில் சிறுவர்களின் நற்பழக்கங்களை பேணுவதும் கெட்ட சிந்தனைகளிலிருந்தும் மது போதைகளிலிருந்தும் சிறுவர்களை காப்பாற்றுவது இதன் நோக்கமாகும். சிறுவர்களிடமிருந்து கலைகளையும், ஆக்கங்களையும், ஆன்மீக வழிபாடுகளையும் வெளிக்கொண்டுவரும் நோக்கோடு இந்நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது. சிறுவர்களின் நடனம், பாடல்கள் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளது. இதில் பெருந்திரளான சிறுவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதற்கு இவ் அமைப்பின் தலைவர் கலாபூசனம் மார்க்கண்டு சிவஞானம் அவர்களும் ஒட்டுசுட்டான் கோட்டக்கல்வி அதிகாரி பங்கயச்செல்வன் அவர்களும் கலந்துசிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

புளியங்குளம், கோபிகா.

unnamed (1)

unnamed (2)

unnamed (3)

SHARE