சிறுவனிடம் தவறாக நடக்க முயன்ற கொடூரன்ஆத்திரத்தில் செய்த இரக்கமற்ற செயல்.! (வீடியோ)

154

சிறுவனை கொடூரன் ஒருவன் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த நிலையில் அவன் எதிர்த்து போராடியதால் ஆத்திரத்தில் கொலை செய்து உடலை பல துண்டுகளாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் ஓர்டட்னோ நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. ரஷ்லன் கொரோலேவ் (10) என்ற சிறுவன், அங்குள்ள ரயில் நிலைய நடைமேடை நோக்கி சில தினங்களுக்கு முன்னர் நடந்து வந்தான்.

அப்போது அங்குள்ள கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த அலெக்சாண்டர் ஜார்ஜிவிஸ்கி என்ற நபர் ரஷ்லனை பார்த்துள்ளார்.

பின்னர் மெதுவாக சிறுவனிடம் பேச்சு கொடுத்த அலெக்சாண்டர் அவனுக்கு இனிப்பு பண்டங்கள் வாங்கி தருவதாக கூறி கடைக்கு அழைத்து சென்றார்.

கடையில் கேக் மற்றும் வோட்கா மதுவை வாங்கிய அலெக்சாண்டர் ரஷ்லனை தனது அடுக்குமாடி வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அவனை பலாத்காரம் செய்ய அலெக்சாண்டர் முயல அவன் தடுக்க முயன்றுள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த அலெக்சாண்டர் இரக்கமன்றி ரஷ்லன் கழுத்தை நெரித்து கொலை செய்து அவன் உடலை பல துண்டுகளாக வெட்டி நகரின் பல பகுதிகளில் வீசியுள்ளார்.

இந்நிலையில் காணாமல் போன ரஷ்லனை பொலிசார் தேடிய நிலையில் அவன் உடல் பாகத்தை கண்டுப்பிடித்தனர்.

மேலும் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகளை வைத்து அலெக்சாண்டரை கடந்த 21-ஆம் திகதி பொலிசார் கைது செய்தனர்.

சிறுவனின் மீதி உடல் பாகங்களை கொலையாளி எங்கு போட்டான் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதோடு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன ஆறு வயது சிறுவன் குறித்தும் அலெக்சாண்டரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE