சிறையில் வாடுகின்ற ஒட்டுமொத்த அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்றமுறையில் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும்-வடமாகாணசபைஉறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா

248

 

வடமாகாணசபைஉறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாஆகியநான் 11.11.2015ம்; திகதி

அன்று காலை கௌரவ பாராளமன்ற உறுப்பினர்களான

i3

ந.சிவசக்திஆனந்தன் கௌரவ வைத்தியகலாநிதி சி.சிவமோகன் கௌரவ வடமாகாணசபை

உறுப்பினரான ஆ.P.நடராசா அகியோருடன் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று

அங்குள்ள அரசியல் கைதிகளைப் பார்வையிட்டோம் அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருந்த

போதிலும் அவர்களுடன் கலந்துரையாடிய போது பல கோரிக்கைகளை எங்களிடம் விடுத்தார்கள்

வடமாகாணசபை உறுப்பினர் என்றவகையில் எங்கள் ஊடாக வடமாகாணசபை கௌரவமுதலமைச்சர்

அவர்கட்கு ஓர் செய்தியையும் எங்களிடம் கூறினார்கள்.

வடமாகாணசபை முதலமைச்சர் கௌரவநீதியரசர். க.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் தமதுதலைமையில்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வடகிழக்கு மாகாண பாராளமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை

உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்று கூட்டிஅவர் தலைமையில் ஓர் கூட்டத்தை ஒழுங்குசெய்து

சிறையில் வாடுகின்ற ஒட்டுமொத்த அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்றமுறையில்

பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் என அரசை வலியுறுத்தவேண்டும் என்று

கேட்டுக்கொண்டார்கள் இச்செய்தியை கௌரவ முதலமைச்சர் அவர்கட்கு தெரியப்படுத்துமாறும்

கோரியுள்ளார்கள் ஆகவே இக்கோரிக்கையை கௌரவமுதலமைச்சர் அவர்கள் ஏற்றுக்கொண்டு

உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் எனஅன்புடன் வேண்டுகின்றேன்.

SHARE