சீண்டிய ஜேம்ஸ் பால்க்னர்.. பதிலடி கொடுத்த கோஹ்லி: ருசிகர சம்பவம்

272

 

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் ஒரு ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 295 ஓட்டங்கள் எடுத்தது.

இந்தப் போட்டியில் இந்தியா துடுப்பெடுத்தாடும் போது 35வது ஓவரில் அவுஸ்திரேலிய வீரர் பால்க்னருக்கும் விராட் கோஹ்லிக்கும் இடையே வார்த்தை போர் நடைபெற்றது.

கோஹ்லி இந்திய அணி ஓட்டங்களை உயர்த்த ஆக்ரோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது 35வது ஓவரை பால்க்னர் கோஹ்லிக்கு வீசினார்.

அந்த ஓவரில் முதல் 4 பந்துகளை கோஹ்லியால் அடிக்க முடியவில்லை. பின்னர் 5வது பந்தில் ஒரு ஓட்டம் எடுத்தார். அப்போது பால்க்னர், “எனது பந்துவீச்சை அடித்து நொறுக்க முயற்சி செய்கிறாயா?” என்று கோஹ்லியை சீண்டினார்.

இதற்கு கோஹ்லி, ”எனது வாழ்கையில் உன்னை போதுமான அளவு அடித்து நொறுக்கி விட்டேன். உனது நேரத்தை வீணாக்காமல் பந்து வீசு” என்று பதிலடியாக பதிலளித்தார்.

கோஹ்லி பேசுவது ஸ்டெம்பில் இருந்த மைக்கில் தெரிவாக பதிவாகி இருந்தது. தொடர்ந்து அசத்திய கோஹ்லி இந்தப் போட்டியில் 117 ஓட்டங்கள் விளாசினார்.

மேலும், அதிகவேகமாக 7,000 ஓட்டங்கள் கடந்த வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்தார்.

SHARE