மீட்டியாககொட, களுபே பிரதேசத்தில் ஒருவரை சுட்டுக்கொல்ல முயற்சித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஊரகஸ்மங்ஹந்தி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துகஹாஹெத்தேம்ப நெடுஞ்சாலைக்கு அருகில் வைத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான இந்த நபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.