சுவிஸில் ஐம்பதாயிரம் தமிழர்களுக்கு புகலிடம்! ஐரோப்பாவில் முதலிடம்

174

swiss_flag_19012016_kaa_cmy

சுவிட்சர்லாந்தில் சுமார் ஐம்பதினாயிரம் தமிழர்கள் அரசியல் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஆகக்கூடிய அளவில் இலங்கைத் தமிழர்கள் அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ள சுவிட்சர்லாந்து ஆகும். அங்கு அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்ட வெளிநாட்டவர் எண்ணிக்கை அடிப்படையில் தமிழர்கள் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சுவிட்சர்லாந்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பெரும் வர்த்தகர்களாக இருக்கின்றனர். எனினும் அங்கு இதுவரை விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்படவில்லை.

இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் வரையான காலப்பகுதியில் மட்டும் சுமார் 1400 ஈழத் தமிழர்கள் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE