சூர்யாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்- காரணம் என்ன ?

202

சூர்யாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்- காரணம் என்ன ? - Cineulagam

நேற்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாக்கை பதிவு செய்தனர்.இதில் தனுஷ், மணிரத்னம், சமந்தா போன்றவர்கள் வாக்கு அளிக்கவில்லை. மேலும் இத்தேர்தலில்சூர்யா எல்லாரும் வாக்களிக்க வேண்டும், நம் ஜனநாயக கடமையை தவறக் கூடாது என்று வீடியோ மூலம் பதிவு செய்தார் .

ஆனால் கடைசியில் அவரே வரவில்லை, என்னவென்று விசாரித்தால் வெளிநாட்டில் குடும்பத்துடன் சிக்கி கொண்டாதால் கடைசி நேரத்தில் வர இயலவில்லை என்று அறிக்கை வெளியிட்டார்.

இதை அறிந்த சமுக தளவாசிகள் சாதாரண மக்கள் கூட தங்களது சொந்த ஊருக்கு வண்டி பிடித்து வாக்கு செலுத்தி வந்தனர். ஆனால் சமுகத்தில் ஒரு நல்ல நிலையில் இருக்கும் சூர்யா போன்றவர்கள் சுழலை காட்டி தப்பிக்க கூடாது என்று கோபத்தை காட்டி வருகின்றனர்.

SHARE